உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி
திங்கள், ஜனவரி 28, 2008 அன்று எழுதியவர் : Unknown
படம் : துளசி (தெலுங்கு)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
குரல் : சித்ரா, சாகர்
வரிகள் : பாஸ்கரபட்லா
இந்தப் பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள். தெலுங்கு பாடலின் மெட்டுக்கு தமிழ் வரிகள் பொருந்துகின்றனவா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் :)
உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி
கண்டோமே ஓரோவியம்
உன் சொல்லில்பாதி என்சொல்லில் பாதி
செய்தோமே சிறுகாவியம்
கனாவில் கனாவில் மனம் என்னிடமில்லை
உன்னோடு உலா போய் வரும்
உலாவில் உலாவில் உடல்தானே இருக்கும்
பறந்தோடும் மனம் உன்னிடம்
(உன் கண்ணில்பாதி...)
நிறமாக நானும் நிறை வாசம் நீயும்
பூவிலே ஒருவராய்… மலர லாமா?
இரவாக நானும் சிறு மீன்கள் நீயும்
வானிலோ வெண்ணிலா… நுகர லாமா?
கண்ணடியில் கனவாக வருகின்ற வேளை
இமைகொண்டு இரவோடு சிறை செய்யவா?
கைதாக கண்தேடி நானாக வந்தேன்
என்சிறையும் நீயல்லவா?
(உன் கண்ணில்பாதி...)
விரலாக நானும் ஒரு தூவல்* நீயும்
காதலும் கவிதையே எழுத லாமா?
சிறகாக நானும் சிறு பறவை நீயும்
ஒன்றாக வானிலே பறக்க லாமா?
உன்தேகம் சிறகாக வந்தாலே நோகும்
என்னுள்ளே உயிராக்கி நான் சுமக்கவா?
சுமையின்றி சுகமாக நீயென்னை சுமக்க
சிறகிலொரு இறகாகவா?
(உன் கண்ணில்பாதி...)
தெலுங்குப் பாடலைக் கேட்க :
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
குரல் : சித்ரா, சாகர்
வரிகள் : பாஸ்கரபட்லா
இந்தப் பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள். தெலுங்கு பாடலின் மெட்டுக்கு தமிழ் வரிகள் பொருந்துகின்றனவா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் :)
உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி
கண்டோமே ஓரோவியம்
உன் சொல்லில்பாதி என்சொல்லில் பாதி
செய்தோமே சிறுகாவியம்
கனாவில் கனாவில் மனம் என்னிடமில்லை
உன்னோடு உலா போய் வரும்
உலாவில் உலாவில் உடல்தானே இருக்கும்
பறந்தோடும் மனம் உன்னிடம்
(உன் கண்ணில்பாதி...)
நிறமாக நானும் நிறை வாசம் நீயும்
பூவிலே ஒருவராய்… மலர லாமா?
இரவாக நானும் சிறு மீன்கள் நீயும்
வானிலோ வெண்ணிலா… நுகர லாமா?
கண்ணடியில் கனவாக வருகின்ற வேளை
இமைகொண்டு இரவோடு சிறை செய்யவா?
கைதாக கண்தேடி நானாக வந்தேன்
என்சிறையும் நீயல்லவா?
(உன் கண்ணில்பாதி...)
விரலாக நானும் ஒரு தூவல்* நீயும்
காதலும் கவிதையே எழுத லாமா?
சிறகாக நானும் சிறு பறவை நீயும்
ஒன்றாக வானிலே பறக்க லாமா?
உன்தேகம் சிறகாக வந்தாலே நோகும்
என்னுள்ளே உயிராக்கி நான் சுமக்கவா?
சுமையின்றி சுகமாக நீயென்னை சுமக்க
சிறகிலொரு இறகாகவா?
(உன் கண்ணில்பாதி...)
*தூவல் - பேனா
தெலுங்குப் பாடலைக் கேட்க :
கண்டோமே ஓரோவியம்//
முதல் வரியே வசிகரிக்கிறது!
வாழ்த்துகள் அருட்பெருங்கோ!!
வாழ்த்துகள் அருட்பெருங்கோ!!/
வாழ்த்துகளுக்கு நன்றிங்க நாடோடி இலக்கியன்!!!
பாட்டும் சுகம். உங்க வரிகளும் சுகம்.
பாட்டும் சுகம். உங்க வரிகளும் சுகம்./
நன்றிங்க புதுகைத் தென்றல்!!!
நன்றிங்க சீனா. முதல்ல இங்க எழுதி திறமைய வளர்த்துக்குவோம்
நிறமாக நானும் நிறை வாசம் நீயும்
பூவிலே ஒருவராய்… மலர லாமா?
இரவாக நானும் சிறு மீன்கள் நீயும்
வானிலோ வெண்ணிலா… நுகர லாமா?
கண்ணடியில் கனவாக வருகின்ற வேளை
இமைகொண்டு இரவோடு சிறை செய்யவா?
கைதாக கண்தேடி நானாக வந்தேன்
என்சிறையும் நீயல்லவா?
அருமை...
பூவிலே ஒருவராய்… மலர லாமா?
"Poovaaga naamume" What about My opinion?
Karuthu mattume Solluvom. hi hi hi!
சுமையின்றி சுகமாக நீயென்னை சுமக்க
சிறகிலொரு இறகாகவா?
Really These lines are something great.
[Sorry for English Font (my e- Kalappai has gone)].
வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி நண்பரே…
அந்த வார்த்தைகளும் பொருந்தி வரும்னு தான் தோணுது… :)
நன்றி நன்றி :)
உன் சொல்லில்பாதி என்சொல்லில் பாதி செய்தோமே சிறுகாவியம் //
ஆரம்பமே அசத்தல்! பாடல் முழுதும் அருமையான வரிகள்!! வாழ்த்துக்கள்!
வாழ்த்துகளுக்கு நன்றிங்க வந்தியத்தேவன்!!!