ஏமாய்ந்தி ஈ வேளா / ஏதேதோ பேசும் என்னை

பாடல் : ஏமாய்ந்தி ஈ வேளா
படம் : ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேருலே
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : உதித் நாராயண்
வரிகள் : குலசேகர்

மெட்டுக்கேற்ற எனது தமிழ் வரிகள் கீழே.
நா.முத்துக்குமாரின் வரிகள் யாரடி நீ மோகினி படத்தில் உள்ள 'எங்கேயே பார்த்த நெருக்கம்' பாடலாக...


Can you feel her?
Is your heart speaking to her?
Can you feel the love?
Yes

ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே

கவிதை வடிவிலொரு சிற்பம்
கொஞ்சம்கெஞ்சவைக்குமவள் கோபம்
இரும்பு இதயம் இழுக்கும் காந்தம்
உயிரைவந்து உலுக்கும் உருவம்
மறுபடியும் எனது ஜனனம்
மனதிலெங்கும் காதல் மலரும்

சிறுபிள்ளை இழுத்துப்போகும் நூல்வண்டி போலானேன்
இவளுக்கொரு அடிமைபோல கூட கூட கூட போகிறேன்
அசையுமழகு விரல்களாலே ஆவியெடுத்துப் போகிறாள்
இதயம்திறந்து பார்த்துவிட்டு என்னவிலையென்று கேட்கிறாள்
இதோஇதோ இப்பொழுதே இனாமாக இதயம் தந்தேன்

அவளின் கண்கள் தாளம்போட
அலையும் கூந்தல் கவிதைபாட
எனது இதயம் நடனம் ஆட
உதடு ஏதோ உளறல்தேட

ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே

நாளும் நட்சத்திரம் பார்த்து
பெண் தேடிப்போகும் வலி இல்லை.
தேவ தேவதை போன்ற
ஒரு பெண்ணை இழக்கும் வழியேதுமில்லை.
கிலுகிலுப்பை ஆட்டும்போது அழ மறந்த குழந்தைபோல
அவள்முகத்தை பார்க்கும்போது எனைமறந்துபோகின்றேன்

களவு செய்தே கைதும் செய்தாள்
நின்று கொண்டே நடக்க வைத்தாள்
கண்கள் இரண்டும் சிரிக்க வைத்தாள்
மௌனமாக பேசவைத்தாள்

தெலுங்கு பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேருலே

பாடல் : ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேருலே
படம் : குஷி
இசை : மணி சர்மா
குரல் : முரளிதர்
வரிகள் : பிங்காலி நாகேந்திரராவ்.

மெட்டுக்கேற்ற தமிழ் வரிகள் கீழே :

தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
காணாமல் போகிறாய்…. காணாமல் போகிறாய்….
காணாமல் போகிறாய்…. காணாமல் போகிறாய்….

இரவு முழுதும் இருட்டுக்குள்ளே இதயம் தேய இழுக்கிறாய்
இரவு முழுதும் இருட்டுக்குள்ளே இதயம் தேய இழுக்கிறாய்
பகலில் தேடும் பார்வைகளை பார்க்காது மறுக்கிறாய்
பகலில் தேடும் பார்வைகளை பார்க்காது மறுக்கிறாய்

தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்

உயிரை உருவி உருக்கிவைத்தும் நழுவிநழுவி தப்புகிறாய்
உயிரை உருவி உருக்கிவைத்தும் நழுவிநழுவி தப்புகிறாய்
விலகிப் பறந்து போனபிறகு நினைவினிலே வாழுகிறாய்
விலகிப் பறந்து போனபிறகு நினைவினிலே வாழுகிறாய்

தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்
தேடிவந்து காதல்கண்டும் காணாமல் போகிறாய்

தெலுங்கு பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

தமிழ்த்தாய் வாழ்த்து - பொருள் + இசையுடன்

தமிழ்த்தாய் வாழ்த்து :

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

- மனோண்மணீயம் பெ.சுந்தரனார்

பொருள் :

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும்
சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்
தென்னாடும் அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்
பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.
அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்
எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து
எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

இசையுடன் :
neerarum.mp3

இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

முத்தம் முத்தம்

பாடல் : இஷ்டம் இஷ்டம்
படம் : அம்ருதம் (மலையாளம்)
இசை : ஜெயச்சந்திரன்
குரல் : சித்ரா
வரிகள் : கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி

மெட்டுக்கேற்ற தமிழ் வரிகள் இங்கு

முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
மாலை இல்லம் வரும்நேரம் ஒருமுத்தம்
முத்தமாநிலம் நானே நீமுத்தமாமழை தூவு

நெருங்கிவரும் பொழுதினில் விரல்பேசவும்
தூரம்போகும் வேளையில் தொலைபேசவும்
பகலொன்றில் நீசிந்தும் பனிமுத்தமும்
தீராத இரவிலுன் தோள்சாயவும்
கனவுகளாய் என் கண்களினில்
உள்ளே முழுதும் நீதான்

முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்

கண்ணோர கனவிலும் கதைபேசவும்
கொண்டாடும் விழியினில் குடியேறவும்
கடற்கரை நடையினில் விரல்பின்னவும்
காதோடு இழைகின்ற இசையாகவும்
எந்நேரமும் உன்னோடுதான்
உயிராக சேர்கிறேன் நான்

முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
மாலை இல்லம் வரும்நேரம் ஒருமுத்தம்
முத்தமாநிலம் நானே நீமுத்தமாமழை தூவு

பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

நானே பேசிக்கொண்டு..

பாடல் : நாலோ ஊஹலக்கு
படம் : சந்தமாமா
இசை : கே.எம். இராதாகிருஷ்ணன்.
குரல் : ஆஷா போஸ்லே
வரிகள் : ஆனந்த் ஸ்ரீராம்.
(மெட்டுக்கு ஏற்ற(?) எனது தமிழ் வரிகள் கீழே…)

நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்
தனிநிலவாய்…
பூவே
கேளாய்
நீகூட அவனைப் போலாகி…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்

விரல்களும் துடிக்குதே
கண்களும் சிதறுதே
இதயமும் நடுங்குதே
உயிரெலாம் உதிருதே

பார்வைகூட மறையும் நேரம் இமையில் உன்முகம்பார்த்து…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்

புன்னகையில் அழுகிறேன்
கண்ணீரில் சிரிக்கிறேன்
குரலினில் உடைகிறேன்
மௌனமாய் அழிகிறேன்

உன்னைக் காணும் கடைசி முறையில் உடையும் வார்த்தைகள்…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்
தனிநிலவாய்….
பூவே
கேளாய்
நீகூட அவனைப் போலாகி…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்

பாடலைக் கேட்க:

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

இசையில்லாப் பாடல் - 1

சின்ன சின்னதாய் சிலிர்த்திடும் சில கனவுகள்
செல்ல செல்லமாய் எனக்குள்ள் சிறு சாரல்கள்
கனவுகள்…. உன் கண்கள் சேருமா?
சாரலில்… உன் இதயம் நனையுமா?

காதல் பூக்கள் கண்கள் போலே பூக்க வைத்தேன்
பார்வைப் பூங்கா உந்தன் பாதை ஆக்கி வைத்தேன்
நீ வரும்வழியில்… உன் கருவிழியும்… வண்டாகுமோ… கொண்டாடுமோ

(சின்ன சின்னதாய்)

காற்றைக் கூட பாடல் மூலம் உழுது வைத்தேன்
காதல் கவிதை எந்தன் இதழில் எழுதி வைத்தேன்
உன் பூவிதழும்… உன் தேனிதழும்… இசையாகுமோ… கவிசேருமோ

(சின்ன சின்னதாய்)

கனவில் வந்தாய் கன்னக் குழியில் நழுவ பார்த்தேன்
காலைப் பனியில் காதல் கலந்து மழை வார்த்தேன்
உன் கல்மனசும்… என் நிலமாகும்.... மண்வாசனை… உண்டாகுமோ

(சின்ன சின்னதாய்)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி

படம் : துளசி (தெலுங்கு)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
குரல் : சித்ரா, சாகர்
வரிகள் : பாஸ்கரபட்லா

இந்தப் பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள். தெலுங்கு பாடலின் மெட்டுக்கு தமிழ் வரிகள் பொருந்துகின்றனவா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் :)

உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி
கண்டோமே ஓரோவியம்

உன் சொல்லில்பாதி என்சொல்லில் பாதி
செய்தோமே சிறுகாவியம்

கனாவில் கனாவில் மனம் என்னிடமில்லை
உன்னோடு உலா போய் வரும்

உலாவில் உலாவில் உடல்தானே இருக்கும்
பறந்தோடும் மனம் உன்னிடம்




(உன் கண்ணில்பாதி...)

நிறமாக நானும் நிறை வாசம் நீயும்
பூவிலே ஒருவராய்… மலர லாமா?
இரவாக நானும் சிறு மீன்கள் நீயும்
வானிலோ வெண்ணிலா… நுகர லாமா?

கண்ணடியில் கனவாக வருகின்ற வேளை
இமைகொண்டு இரவோடு சிறை செய்யவா?
கைதாக கண்தேடி நானாக வந்தேன்
என்சிறையும் நீயல்லவா?




(உன் கண்ணில்பாதி...)

விரலாக நானும் ஒரு தூவல்* நீயும்
காதலும் கவிதையே எழுத லாமா?
சிறகாக நானும் சிறு பறவை நீயும்
ஒன்றாக வானிலே பறக்க லாமா?
உன்தேகம் சிறகாக வந்தாலே நோகும்
என்னுள்ளே உயிராக்கி நான் சுமக்கவா?
சுமையின்றி சுகமாக நீயென்னை சுமக்க
சிறகிலொரு இறகாகவா?




(உன் கண்ணில்பாதி...)

*தூவல் - பேனா


தெலுங்குப் பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->