நானே பேசிக்கொண்டு..

பாடல் : நாலோ ஊஹலக்கு
படம் : சந்தமாமா
இசை : கே.எம். இராதாகிருஷ்ணன்.
குரல் : ஆஷா போஸ்லே
வரிகள் : ஆனந்த் ஸ்ரீராம்.
(மெட்டுக்கு ஏற்ற(?) எனது தமிழ் வரிகள் கீழே…)

நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்
தனிநிலவாய்…
பூவே
கேளாய்
நீகூட அவனைப் போலாகி…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்

விரல்களும் துடிக்குதே
கண்களும் சிதறுதே
இதயமும் நடுங்குதே
உயிரெலாம் உதிருதே

பார்வைகூட மறையும் நேரம் இமையில் உன்முகம்பார்த்து…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்

புன்னகையில் அழுகிறேன்
கண்ணீரில் சிரிக்கிறேன்
குரலினில் உடைகிறேன்
மௌனமாய் அழிகிறேன்

உன்னைக் காணும் கடைசி முறையில் உடையும் வார்த்தைகள்…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்
பகலும் நினைவுதின்று இரவும் விழித்துக்கொண்டு குறைகிற பிறையானேன்
தனிநிலவாய்….
பூவே
கேளாய்
நீகூட அவனைப் போலாகி…
நானே பேசிக்கொண்டு நானே கேட்டுக்கொண்டு உறைகிற நிலையானேன்

பாடலைக் கேட்க:

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

0 மறுமொழிகள் :