பூவே செம்பூவே

பாடல் : பூவே செம்பூவே
படம் : சொல்லத் துடிக்குது மனசு (1988)
இசை : இளையராஜா
குரல் : கே. ஜே. ஜேசுதாஸ்
வரிகள் : ???

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இன்னாளும் என்னாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
இந்த இடுகைக்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கலாம்? ->

1 மறுமொழி :


    கோபிநாத் said...

    ஆகா...சூப்பர் பாட்டு...இந்த பாட்டை கேட்டவுடன் என் கல்லூரி நண்பன் தான் நினைவுக்கு வருகிறான்

    மிக அருமையாக இந்த பாட்டை பாடுவான்.


    (ஆமா..நீங்களும் எங்களை போல தானா...ராசா ரசிகாரா?)
    ஜூலை 09, 2007 மாலை 5:49

    சுதர்சன்.கோபால் said...

    ஹூம்.கேட்க அட்டகாசமா இருக்கிற இந்தப்பாடலை திரையில பார்க்கக் கர்ண கொடூரமா இருக்கும்.

    இந்தப் படத்தில் வரும் "தேன்மொழி,எந்தன் தேவி நீ" என்னும் பாடல் தான் மனோ என்னும் ஒரு பாடகரின் இருப்பை உலகுக்கு உணர்த்தியது.

    நேயர் விருப்பமும் அனுமதிக்கப்படுமா??
    ஒரு கிளியின் தனிமையிலே - பூவிழி வாசலிலே
    ஜூலை 10, 2007 மதியம் 12:55

    அருட்பெருங்கோ said...

    வாங்க கோபி,

    / ஆகா...சூப்பர் பாட்டு...இந்த பாட்டை கேட்டவுடன் என் கல்லூரி நண்பன் தான் நினைவுக்கு வருகிறான்

    மிக அருமையாக இந்த பாட்டை பாடுவான்./

    ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஞாபகம் :)


    /(ஆமா..நீங்களும் எங்களை போல தானா...ராசா ரசிகாரா?)/

    ராசா ரசிகன் இல்ல; ராசா இசைக்கு ரசிகன் ;)
    ஜூலை 10, 2007 மாலை 4:39

    அருட்பெருங்கோ said...

    வாங்க சுதர்சன்,

    / ஹூம்.கேட்க அட்டகாசமா இருக்கிற இந்தப்பாடலை திரையில பார்க்கக் கர்ண கொடூரமா இருக்கும்./

    ம்ம்ம் பாட்டு கேட்பதற்கு மட்டும் இதம்.

    /இந்தப் படத்தில் வரும் "தேன்மொழி,எந்தன் தேவி நீ" என்னும் பாடல் தான் மனோ என்னும் ஒரு பாடகரின் இருப்பை உலகுக்கு உணர்த்தியது./

    அதுவும் நல்ல பாடல்தான். அதையும் போட்டா அப்புறம் ஒரு பட பாடல் மாதிரி ஆகிடும் :)

    /நேயர் விருப்பமும் அனுமதிக்கப்படுமா??
    ஒரு கிளியின் தனிமையிலே - பூவிழி வாசலிலே/

    வர்றேன் வர்றேன்... அந்தப்பாட்டும் நம்மப் பட்டியல்ல இருக்கு :)
    ஜூலை 10, 2007 மாலை 4:40